எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றம்!
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய எரிபொருள் விலைத் திருத்தத்தை அறிவித்துள்ளது.
இதன்படி, அனைத்து வகையான எரிபொருட்களின் விலைகளும் உயர்த்தப்பட்டுள்ளன.
🔹 92 ஒக்டேன் பெற்றோல் – லீற்றருக்கு 24 ரூபா அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 434 ரூபா.
🔹 95 ஒக்டேன் பெற்றோல் – லீற்றருக்கு 25 ரூபா அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 495 ரூபா.
🔹 ஒட்டோ டீசல் – லீற்றருக்கு 15 ரூபா அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 407 ரூபா.
🔹 சுப்பர் டீசல் – லீற்றருக்கு 20 ரூபா அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 478 ரூபா.
🔹 மண்ணெண்ணெய் – லீற்றருக்கு 20 ரூபா அதிகரிக்கப்பட்டு, புதிய விலை 285 ரூபா.
இந்த புதிய விலைத் திருத்தங்கள் நேற்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலைகளின் இந்த திடீர் உயர்வு, வாகன உரிமையாளர்கள் மட்டுமன்றி பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவுகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
