போருக்கு மத்தியிலும் நால்வருக்கு மரண தண்டனை வழங்கிய ஈரான் ; சர்வதேசம் கடும் கண்டம்!
ஈரானில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பெண் செயற்பாட்டாளர் உட்பட நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு சர்வதேச அளவில் கடும் பரபரப்பையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
அரசாங்கக் கொள்கைகள் மற்றும் அரசியல் சூழ்நிலைக்கு எதிராக வீதிகளில் போராட்டங்களில் ஈடுபட்ட பிட்டா ஹெம்மாட்டி (Bita Hemmati), அவரது கணவர் மற்றும் மேலும் இருவர் என மொத்தம் நான்கு பேருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக உலகளாவிய மனித உரிமை அமைப்புகளும், ஐரோப்பிய நாடுகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இத்தகைய தண்டனை அடிப்படை மனித உரிமைகளுக்கு விரோதமானது எனவும் அவை சுட்டிக்காட்டியுள்ளன.
சர்வதேச அழுத்தங்கள் இருந்தபோதிலும், ஈரான் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக, ஈரான் மற்றும் பல உலக நாடுகளுக்கிடையேயான ராஜதந்திர உறவுகள் மீண்டும் பதற்றமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
மேலும், இந்தத் தீர்ப்பு போராட்டங்களில் ஈடுபடுவோரை அச்சுறுத்தும் நோக்கில் வழங்கப்பட்டதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
