ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் வழமைக்கு!


கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறினால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள், இன்று முதல் மீண்டும் வழமையான நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இதன்படி, தேசிய அடையாள அட்டை வழங்கும் ஒருநாள் சேவை உள்ளிட்ட பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து சேவைகளும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கடந்த 17ஆம் திகதி முதல் இச்சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.