உரத் தட்டுப்பாடு குறித்து தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் – பெரும் போக விவசாயிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்!
நாட்டில் பயிர்ச்செய்கைக்குத் தேவையான உரக் கையிருப்பு போதுமான அளவில் உள்ளதால், உரத் தட்டுப்பாடு குறித்து தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என நாமால் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
மொரகொல்லாகம விவசாய சேவை மையத்திற்குச் சென்றபோது அவர் இதனை குறிப்பிட்டார். வரவிருக்கும் பெரும் பருவத்திற்குத் தேவையான டிஎஸ்பி (DSP) மற்றும் எம்ஓபி (MOP) உரங்கள் போதுமான அளவில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த சிறுபோக பருவத்தில் 13,000 மெற்றிக் டொன் எம்ஓபி உரம் பயன்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது 38,000 மெற்றிக் டொன் கையிருப்பில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
Tags:
இலங்கை செய்தி
