நோய் பரவும் அபாயம் - கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கியமான அறிவிப்பு!
காலநிலை மாற்றம் தொடர்பில் அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பிற அதிகாரிகளும் வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கல்வி அமைச்சு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
முன்னர் வெளியிடப்பட்ட 2010/22 மற்றும் 30/2017 சுற்றறிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு மேலதிகமாக, மாணவர்கள் மற்றும் கல்வி/கல்விசாரா ஊழியர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
மழைக்காலம் தொடங்குவதால் நாடு முழுவதும் டெங்கு மற்றும் பல நோய்கள் பரவும் அபாயம் அதிகமாக இருப்பதால், பாடசாலை சூழல் கொசுக்களிலிருந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், மாகாணத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலை அதிபர்கள் , பிரிவேனாக்களின் அதிபர்கள் , தேசிய கல்வியியல் கல்லூரிகளின் பீடாதிபதிகள் மற்றும் பிற கல்வி நிலையங்கள் மற்றும் அலுவலகங்களின் தலைவர்களுக்கு இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மே 31, 2025 வரை நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பதிவான டெங்கு நோயாளிகளில் அதிக சதவீதம் 5 முதல் 19 வயதுக்குட்பட்ட வயதுக்குற்பட்ட பாடசாலை மாணவர்கள் என்று சுகாதாரத் துறைகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.