அஸ்வெசும தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சித் தகவல்!
அஸ்வெசும கொடுப்பனவை மேலும் 4 இலட்சம் குடும்பங்களுக்கு அடுத்த மாதம் வழங்கவுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றம் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.
திட்ட பயனாளிகளை தெரிவு செய்யும் நடவடிக்கைகள், தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்தார்.
420,000 இடைநிலை குடும்பங்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவு கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது நாடளாவிய ரீதியில் 138,000 குடும்பங்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
Tags:
இலங்கை செய்தி