போலி தங்க நகைகளை தமது வங்கியிலேயே அடகு வைத்து, 99 மில்லியன் ரூபா பணத்தை எடுத்த 3 பெண் வங்கி அதிகாரிகள்!
அரச வங்கியின் மூன்று பெண் அதிகாரிகள் ரூ. 99.3 மில்லியன் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் துறையின் விசாரணைகளின் அடிப்படையில், அரச வங்கியின் அடகு பிரிவில் பணியாற்றிய மூன்று பெண் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் 24 காரட் தங்கம் எனக் கூறி, போலி தங்க நகைகளை அடகு வைத்து பணத்தை எடுத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், இந்த மோசடியில் தொடர்புடைய ஒரு சந்தேக நபர் ஏற்கனவே வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.
இந்த மோசடியில் ஈடுபட்ட மற்ற வங்கி அதிகாரிகள் மீதும் காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
Tags:
இலங்கை செய்தி