கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் பத்து மணி நேர நீர் வெட்டு!


கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் புதன்கிழமை (11) பத்து மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, பேலியகொட, வத்தளை, ஜா-எல மற்றும் கட்டுநாயக்க-சீதுவ நகர சபைப் பகுதிகள் மற்றும் களனி, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவங்கொட மற்றும் கம்பஹா பிரதேச சபைப் பகுதிகளுக்கு புதன்கிழமை காலை 08:30 மணி முதல் மாலை 06:30 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும்.

பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நிறுவப்பட்ட சூரிய மின்சக்தி அமைப்பை மேம்படுத்துதல் மற்றும் பிரதான அமைப்புடன் இணைப்பதன் காரணமாக நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.