அவரிடம் மாத்திரம் மன்னிப்பு கேட்க வேண்டும் - வதந்திகளுக்கு புல் ஸ்டாப் வைத்தார் பாடகி கெனிஷா!


நடிகர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து பெற உறுதி எடுத்துள்ள நிலையில், இந்த வழக்கு தற்போது குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் ப்ரீத்தா திருமண விழாவில், பாடகி கெனிஷாவோடு ரவி மோகன் கலந்து கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தால் கடும் வருத்தமடைந்த ஆர்த்தி, தன் குழந்தைகள் மற்றும் திருமண வாழ்க்கை குறித்த ஒரு உணர்ச்சி மிகுந்த பதிவு ஒன்றை வெளியிட்டுட்டார். இதன் பின்னணியில், கெனிஷா அளித்த பேட்டி தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த பேட்டியில் கெனிஷா கூறியதாவது:

“சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவர்களின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டேன். அவரை பல வருடங்களாக எனக்குத் தெரியும் என்பதால் சென்றேன். அங்கு என் அருகில் ரவி மோகனும் இருந்தார். நாங்கள் ஒரே வண்ண உடை அணிந்ததைக் கொண்டு தான் சமூக வலைதளங்களில் இதைக் குறித்த பாசறை உருவானது. நண்பர்கள் ஒரே வண்ணம் அணிவது பெரிதாக பேசப்படவேண்டிய விஷயமில்லை. அது ஏன் இவ்வளவு பரபரப்பாக மாறிவிட்டது என்று எனக்கே புரியவில்லை.

இதன் காரணமாக சிலர் ஐசரி கணேஷ் சார் அவர்களை தவறாக விமர்சித்ததை கேட்டு வருந்தினேன். எனவே அவரிடம் நான் மன்னிப்பு கேட்கவேண்டும். மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதில் எனக்கு கவலையே இல்லை” என்றுள்ளார்.