நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய இன பாம்பு
இலங்கையின் மொனராகலை அருகே உள்ள உயிரியல் ரீதியாக வளமான மரகல மலைத்தொடரில் நாட்டுக்கே உரித்தான ஒரு புதிய பாம்பு இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மொனராகலை நகரத்திலிருந்து 54 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்த இந்த மலைத்தொடரில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பாம்பு, கொலுப்ரிடே (Colubridae) குடும்பத்தைச் சேர்ந்த டென்ட்ரெலாஃபிஸ் (Dendrelaphis) இனத்துடன் தொடர்புடையதாகும்.
உருவவியல் ரீதியாக விரி ஹால்டாண்டா (Bronzeback) உடன் மிக அதிக ஒற்றுமை கொண்ட இந்த புதிய இனத்திற்கு, நாட்டின் முன்னணி ஆராய்ச்சியாளர் தாசுன் அமரசிங்கவின் நினைவாக தாசுன்ஸ் ப்ரோன்ஸ்பேக் எனவும், விலங்கியல் ரீதியில் Dendrelaphis dasyuni எனவும் பெயரிடப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஊவா மாகாணம், மொனராகலை மாவட்டத்திலுள்ள மரகல மலையிலிருந்து சேகரிக்கப்பட்ட ஒற்றை பெண் மாதிரியிலிருந்து இந்தப் புதிய இனத்திற்கு பெயரிடப்பட்டுள்ளதாக ஆராய்ச்சிக் குழுவின் உறுப்பினர் சமீரா சுரஞ்சன் கருணாரத்ன தெரிவித்தார்.
இந்த முக்கிய கண்டுபிடிப்பு, இலங்கையின் தனித்துவமான புவிசார் அமைப்பையும், உயிரியல் பன்முகத்தன்மையையும் மேலும் வலியுறுத்தும் ஒன்றாக கருதப்படுகிறது.