வாகன இறக்குமதி குறித்து நிதி அமைச்சு வெளியிட்டுள்ள புதிய வர்த்தமானி


வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகளை நீக்கி நிதி அமைச்சு புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவிப்பை ஏப்ரல் 29 முதல் அமலுக்கு வரும் வகையில், நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனூடாக, இறக்குமதி செய்யப்பட்டும் பல்வேறு காரணங்களால் விடுவிக்க முடியாமல் துறைமுகத்தில் காணப்படுகின்ற பல வகையான கார்களை விடுவிக்க முடியுமென தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் விளக்கமளித்த இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே,

“ஒன்றரை அல்லது இரண்டு மாதங்களாக இந்த வாகனங்களை எங்களால் விடுவித்துக்கொள்ள முடியவில்லை. Hybrid Toyota Raize மற்றும் Hybrid Nissan X-TRAIL போன்றவற்றை புதிய வர்த்தமானி வௌியிட்டதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். 

இதேபோல், இந்த தொழில்நுட்பத்தின் கீழ் வரும் ஏனைய வாகனங்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.” மேலும் பதிவு செய்யப்படாத புதிய மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.