தகாத உறவினால் பெண் ஒருவர் கொலை!


இன்று (01) மொனராகலை மாவட்டத்தின் கதிர்காமம் பெரகிரிகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில், 46 வயதுடைய பெண் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்டவர் அதே பிரதேசத்தைச் சேர்ந்தவராகும். பொலிஸ் விசாரணைகளில், அவர் கடந்த 10 வருடங்களுக்கு முன் தனது கணவரை விட்டு பிரிந்து, வேறு நபருடன் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கதிர்காமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.