யாழில் சிறுமி வன்புனர்வு; 6 பேர் கைது
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை தொல்புரம் பகுதியில் சிறுமி ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் இன்று (01) வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இதுவரை சம்பவம் தொடர்பில் மொத்தம் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நாளை (02) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Tags:
இலங்கை செய்தி