இளைஞனை கொலை செய்துவிட்டு சடலத்தை தீ வைத்து எரித்த இருவர் கைது!


கல்கிஸ்ஸை - ஹுலுதாகொட பிரதேசத்தில், இளைஞன் ஒருவனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, சடலத்தை தீ வைத்து எரித்ததாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் கல்கிஸ்ஸை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹுலுதாகொட பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் இளைஞன் ஒருவன் சடலமாக கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் இரத்மலானை, மஹிந்தாராமை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஆவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.