காதல் நினைவுகளைத் தூண்டிய பாடல் : திருமணத்தை நிறுத்திய மணமகன்!
டெல்லியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், எதிர்பாராத திருப்பமாக மணமகன் திடீரென திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழா நடந்து கொண்டிருந்தபோது, ரசிகர்கள் மத்தியில் காதல் முறிவு' பாடலாக பிரபலமாக அறியப்படும் 'ஏ தில் ஹை முஷ்கில்' படத்தின் பாடல் DJ யினால் இசைக்கப்பட்டது.
இந்த பாடல், காதல் நினைவுகளைத் தூண்டும் வகையில் இருப்பதால், மணமகனுக்கு தனது கடந்த கால காதலியின் நினைவுகள் உயிர்ப்பெற்றன.
இவ்வாறு மணமகனுக்கு தனது கடந்த கால காதலியின் நினைவுகள் வந்ததால், அவர் தனது திருமணத்தை விட்டு வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து, மணமகனுடன் வந்த விருந்தினர்களும் நிகழ்விடத்தை விட்டு விலகினர்.
காதலியின் நினைவால் திருமணத்தை நிறுத்திய இந்த வினோத சம்பவம் சமூக ஊடகங்களில் தீவிரமாக பரவி வைரலாகியுள்ளது.
Tags:
இந்திய செய்தி