உச்சத்தை தொட்ட உப்பின் விலை!


அண்மைக்காலமாக கிளிநொச்சி மாவட்டத்தில் உப்புக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, சில வர்த்தக நிலையங்களில் ஒருவருக்கு மாத்திரம் ஒரு கிலோ உப்பே வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஒரு கிலோ உப்பின் விலை 300 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால் நுகர்வோர் பெரும் கவலைக்கு ஆட்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 28ஆம் திகதியிலிருந்து ஆனையிறவு உப்பு அனைவருக்கும் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் பலர் ஒரு கிலோ உப்பையும் கூட பெற முடியாத நிலை தொடர்கின்றது. இந்நிலை மேலும் தொடர்ந்தால், கடந்த காலத்தில் தேங்காய்க்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டைப் போன்று, உப்புக்கும் கடுமையான பற்றாக்குறை உருவாகும் என நுகர்வோர் அச்சம் தெரிவித்துள்ளனர்.