இன்று பல பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவு
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட எச்சரிக்கையின்படி, நாட்டின் பல பகுதிகளில் இன்று 50 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல் மற்றும் தென் மாகாணங்கள் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் சில வேளைகளில் மழை பெய்யக்கூடும். அதேவேளை, சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்கள் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மாவட்டங்களில் பிற்பகல் அல்லது இரவுக்காலங்களில் இடியுடன் கூடிய மழை ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தினால், ஏப்ரல் 14ஆம் திகதிவரை சூரியன் இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்ச நிலையில் காணப்படும்.
அதனடிப்படையில், இன்று நண்பகல் 12.11 மணியளவில் ஹத்திகுச்சி, கலங்குட்டிய, ஹல்மில்லேவ, இபலோகம, பலுகஸ்வெவ மற்றும் ஹபரணை பகுதிகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
Tags:
இலங்கை செய்தி