உணவு உற்பத்தி மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு விசேட தடுப்பூசி!
உணவு உற்பத்தி மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு விசேட தடுப்பூசி போடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குட இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இந்த தடுப்பூசியானது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மட்டத்தில் போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு உற்பத்தி தொடர்பான சேவைகளில் ஈடுபடவிருக்கும் ஊழியர்களுக்கு காய்ச்சல் தடுப்பூசி போடப்பட்டதை மருத்துவ அறிக்கையில் குறிப்பிடுவது கட்டாயம் என்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குட தெரிவித்துள்ளார்.
Tags:
இலங்கை செய்தி