வைத்தியர்களுக்கு அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு!
எதிர்காலத்தில் வைத்தியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayathissa) தெரிவித்துள்ளார்.
இன்றைய (04) நாடாளுமன்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர், வைத்தியர்களுக்கான அடிப்படை வேதனம், மேலதிக சேவைக் கொடுப்பனவு, விடுமுறை நாள் கொடுப்பனவு, வருடாந்த சம்பள அதிகரிப்பு, மற்றும் உழைக்கும் போதான வரி (Paye Tax) நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சலுகைகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் கூறுகையில், "இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் வைத்தியர்களின் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டதினால், மார்ச் 5ஆம் திகதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடத்தவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் அறிவித்துள்ளார்.
எமது அரசாங்கம், வரலாற்றில் முதன்முறையாக, எதிர்பாராத வகையில் அனைத்து ஊழியர்களுக்கும் சம்பள அதிகரிப்பை வழங்கவுள்ளது. இதற்கு முன்பு கொடுக்கப்பட்ட கொடுப்பனவுகள் மிக குறைவாக இருந்த நிலையில், தற்போது அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது," என அவர் தெரிவித்தார்.