முன்மாதிரியாக செயற்பட்ட பெண் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்
சிறுவர்கள் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், தனது வெளிநாட்டு பயணத்திற்காக வழங்கப்பட்ட மேலதிக நிதியை செலவிடாமல் அரசாங்கத்திற்குத் திருப்பி வழங்கியுள்ளார்.
அமைச்சருக்கு, ஜெனீவாவில் பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை மாநாட்டின் (CEDAW) 90வது அமர்வு (கடந்த பெப்ரவரி 11 முதல் 16 ஆம் திகதி வரை) குறித்துப் பங்கேற்க 240 அமெரிக்க டொலர்கள் (ஒரு நாளுக்கு 40 டொலர் வீதம்) வழங்கப்பட்டன.
எனினும், அவர் அந்த பணத்தை முழுமையாக பயன்படுத்தாமல், 240 அமெரிக்க டொலர்களை (இலங்கை நாணய மதிப்பில் ரூ. 69,960) அமைச்சின் பொருளாளரிடம் திருப்பி வழங்கினார். இதற்கான ரசீதையும் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சாதாரணமாக அரசியல்வாதிகள் அதிகளவிலான நிதி கோருவதும் ஆடம்பர செலவுகளில் ஈடுபடுவதும் வழக்கமான ஒன்றாக இருக்கும் நிலையில், அமைச்சரின் இந்த நேர்மையான செயல் மக்கள் மத்தியில் பெரிதும் கவனம் பெற்றுள்ளது.