நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு நாடாளுமன்றில் விதிக்கப்பட்டுள்ள தடை!


நாடாளுமன்றில், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால், எதிர்வரும் 8 அமர்வு நாட்களில் முன்வைக்கப்படும் கருத்துகள் மற்றும் உரைகளை நேரடியாக ஒலி மற்றும் ஒளிபரப்பு செய்வதற்கு சபாநாயகரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இராமநாதன் அர்ச்சுனாவினால் நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகள் மற்றும் விமர்சனங்கள் காரணமாக இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன சபையில் அறிவித்தார். 

இதன்படி, இராமநாதன் அர்ச்சுனாவின் வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகளை ஹன்சார்ட் பதிவிலிருந்தும் நீக்குமாறு சபாநாயகர் பணிப்புரை விடுத்துள்ளார்.