முன்னாள் பொலிஸ் மா அதிபரான தேசபந்து தென்னகோன் நீதிமன்றில் சரண்


வெலிகம துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இருந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பல நாட்களாக தலைமறைவாக இருந்தார்.

இந்த நிலையில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.