சிறுவனின் உயிரைப் பறித்த பலூன்!


காலி - நெலுவ பகுதியில் பலூன் துண்டு ஒன்று தொண்டையில் சிக்கியதன் காரணமாக 11 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

பெற்றோர் வீட்டில் இருந்தபோது, குறித்த சிறுவன் பலூனை வைத்து விளையாடிக்கொண்டிருந்ததாகவும், 

இதன் போது பலூன் வெடித்து அதில் ஒரு துண்டு சிறுவனின் தொண்டையில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து, குறித்த சிறுவன் நெலுவ - மெதகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.