மாணவர்களுக்கு காலணிகள் வழங்குவதற்கான வவுச்சர் சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு


பாடசாலை மாணவர்களுக்கு காலணிகள் வழங்குவதற்கான வவுச்சர் சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் நேற்றுடன் முடிவடையும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், பாடசாலை மாணவர்களுக்கு காலணிகள் வழங்குவதற்கான வவுச்சர் சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது என்பதனை ஓர் அறிக்கை வெளியிட்டு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான குறித்த வவுச்சர் சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் 2025.04.10 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.