மனித நுகர்விற்கு பொருத்தமற்ற கோதுமை மா கண்டுபிடிப்பு


வத்தளை, உஸ்வெட்டகெய்யாவ
பகுதியில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் சந்தைக்கு விநியோகிக்க தயாராக இருந்த, மனித நுகர்விற்கு பொருத்தமற்ற கோதுமை மாவு தொகை நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புறக்கோட்டை பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையில், சந்தைக்கு விநியோகிக்க தயாராக வைக்கப்பட்டிருந்த 750 தொன் கோதுமை மாவு, உணவுப் பயன்பாட்டிற்கு பொருத்தமற்றது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

காலாவதி மற்றும் பூச்சிகளால் பாதிப்பு

🔹 உற்பத்தி திகதிகள் – கடந்த ஆண்டு மார்ச் மற்றும் மே மாதங்களில் உருவாக்கப்பட்டது.
🔹 காலாவதி திகதிகள் – இந்த ஆண்டு மார்ச் மற்றும் மே மாதங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.
🔹 தரக் குறைவுகள் – ஆய்வின்போது மாவு வண்டுகளால் (insects) தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை குறித்த மாவு தொகையை கைப்பற்றி, மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.