பாட்டியின் மாத்திரையை விழுங்கிய ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு!
முல்லைத்தீவு மாங்குளம் கற்குவாறி பகுதியில், ஆரோக்கிய அன்ரனி சஞ்சித் எனும் ஒன்றரை வயது ஆண் குழந்தையொன்று மரணமடைந்துள்ளது.
வீட்டில் பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருந்த பாட்டியின் மாத்திரையை, யாரும் கவனிக்காத நிலையில், குறித்த குழந்தை எடுத்துக் கொண்டு நேற்று (4) மாலை விழுங்கியதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, நேற்று இரவு திடீரென குழந்தையின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. உடனடியாக மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்ததாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.