யால தேசிய பூங்காவிற்கு பூட்டு!
"யால தேசிய பூங்கா இன்று (01) முதல் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது" என்று யால தேசிய பூங்காவின் பொறுப்பாளர் மனோஜ் வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக பெய்த கடும் மழையினால், யால தேசிய பூங்காவின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன மற்றும் பூங்காவிற்குள் உள்ள சில ஏரிகளின் கரைகள் உடைந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக, வனவிலங்குகளின் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, இன்று முதல் மழை நிலைமைகள் தணியும் வரை யால தேசிய பூங்காவை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, யால வலய இலக்கம் 01-ஐ சேர்ந்த கடகமுவ மற்றும் பலடுபான நுழைவு வாயில்கள் மூடப்பட்டுள்ளன.