டொலரின் பெறுமதி எகிறும் - நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸாநாயக்க எச்சரிக்கை!


எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸாநாயக்க (Chamara Sampath Dassanayaka) எச்சரிக்கை விடுத்து, நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு தற்போது 5.7 பில்லியன் டொலர்களாக குறைந்துள்ளதாக தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஆட்சிக் காலத்தில், டொலர் கையிருப்பு 300 மில்லியன்கள் குறைவடைந்துள்ளதாக அவர் கூறினார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம், டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 310 ரூபாவாக உயர்வடைய வாய்ப்புள்ளதாக அவர் எச்சரிக்கை விடுத்தார்.

இந்தக் காலப்பகுதியில், டொலர் கையிருப்பு மேலும் 200 மில்லியன் டொலர்களால் குறைவடையும் என சாமர சம்பத் தஸாநாயக்க கூறினார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.