நாட்டிற்கு மேலும் 334 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்க IMF அங்கீகாரம்
நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு மேலும் 334 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை ஒப்புதல் அளித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு, 48 மாத கால நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கையுடனான மூன்றாவது மதிப்பாய்வை முடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மீளாய்வு கூட்டம் நேற்று (28) வெள்ளிக்கிழமை இடம்பெற்றதுடன், அதில் இலங்கையுடனான நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் மூன்றாவது மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது.
இதன் மூலம், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்குக் கிடைக்கும் மொத்த கடனுதவி தொகை 1.3 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கிறது.