சவூதி,கத்தார், துபாய் உள்ளிட்ட நாடுகளில் ரமழான் நோன்பு ஆரம்பம்..


சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, சவூதி அரேபியா, கத்தார், துபாய், இந்தோனேசியா, குவைத், பஹ்ரைன் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நேற்று (28) மாலை ரமழான் பிறை தென்பட்டதால், இன்று (01) புனித நோன்பு ஆரம்பமாகியுள்ளது.

இதன்படி, வளைகுடா நாடுகளில் உள்ள இஸ்லாமியர்கள் நேற்று இரவு முதல் தராவீஹ் தொழுகையை தொடங்கியுள்ளனர். அத்துடன், மார்ச் 1 (சனிக்கிழமை) முதல் நோன்பு கடைப்பிடிக்கவும் தொடங்கியுள்ளனர். அங்குள்ள மதத் தலைவர்கள், ரமழான் புனித மாதம் தொடங்கியதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதேவேளை, இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், புரூனை, ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் நாளை (02) ஞாயிற்றுக்கிழமை நோன்பு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.