டெங்கு உயிரிழப்புகள் 63 ஆக உயர்வு; பாதிப்பு 88 ஆயிரத்தை கடந்தது!


நடப்பாண்டின் ஆரம்பம் முதல் இதுவரை நாட்டில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 88,088 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேவேளை, டெங்கு காய்ச்சலால் இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அந்தப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

நேற்று (05) வெளியிடப்பட்ட தரவுகளின்படி, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2,739 புதிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

டெங்கு பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பதுடன், கொசுக்கள் பெருகக்கூடிய இடங்களை உடனடியாக அகற்றுமாறும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.