கடற்பரப்பில் பலத்த காற்று - மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
காங்கேசன்துறை முதல் மன்னார் வழியாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், மறுஅறிவிப்பு வரும் வரை குறித்த கடற்பரப்புகளில் பயணிக்க வேண்டாம் என மீனவர்களுக்கும் கடற்றொழிலாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கடல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைவரும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Tags:
இலங்கை செய்தி
