2027 ஆம் ஆண்டளவில் நாட்டின் அனைத்து மாகாணங்களுக்கும் ஒரே மாதிரியான முன்பள்ளி கல்வி முறைமை!
2027 ஆம் ஆண்டளவில் நாட்டின் அனைத்து மாகாணங்களுக்கும் ஒரே மாதிரியான முன்பள்ளி கல்வி முறைமையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
ஆரம்பப் பருவ சிறுவர் அபிவிருத்தி கல்வித் திட்டத்தின் ஆரம்ப விழாவில் உரையாற்றிய போது அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, ஆரம்பப் பருவ சிறுவர் கல்வி நாட்டின் ஏனைய கல்வி செயற்பாடுகளுடன் இணையாக முன்னேற வேண்டும் என்றும், அதற்காக கல்வி அமைச்சும் பங்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தற்போது நாட்டில் முன்பள்ளி பாடத்திட்டம் முறைசாரா வகையில் காணப்படுவதுடன், இது இன்னும் முழுமையான அரச சேவையாக மாற்றப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், முன்பள்ளி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஒருங்கிணைந்த நடைமுறையோ அல்லது கண்காணிப்பு அமைப்போ இதுவரை இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த புதிய முன்முயற்சி இலங்கையின் ஆரம்பகால சிறுவர் கல்வியை முறைப்படுத்தி, தேசிய கல்வி நீரோட்டத்துடன் இணைக்கும் முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
