ஜூலை 1 முதல் பேருந்து கட்டணத்தில் மாற்றம் – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு!
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தின் அடிப்படையில், எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி முதல் பேருந்து கட்டணங்களில் அதிகரிப்பு அமல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ. சந்திரபால, கட்டண உயர்வை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலை மாற்றம் அறிவிக்கப்பட்ட பின்னரே பேருந்து கட்டண உயர்வின் இறுதி சதவீதம் தீர்மானிக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, எரிபொருள் விலை மாற்றத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய பேருந்து கட்டண விவரங்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளன.
Tags:
இலங்கை செய்தி
