உடலில் மறைத்து கொண்டு வந்த ரூ. 24 மில்லியன் மின்னணு சாதனங்கள் - சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 9 சீனர்கள்!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA), கணினி தொடர்பான நிதி மோசடிகளில் ஈடுபட வந்ததாக சந்தேகத்தின் பேரில் 9 சீனப் பிரஜைகள் இலங்கை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதன்கிழமை (15), சீனாவின் குன்மிங் நகரத்திலிருந்து வந்த இவர்களை கிரீன் சேனல் பகுதியில் சுங்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
சோதனையின் போது, அவர்களின் உடலிலும் ஆடைகளிலும் செலோடேப்பால் மறைத்து வைத்திருந்த சுமார் ரூ. 24 மில்லியன் மதிப்புள்ள மின்னணு தொடர்பு சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் ரூ. 17.5 மில்லியன் மதிப்புள்ள 383 பயன்படுத்தப்பட்ட மொபைல் போன்கள், ரூ. 6.47 மில்லியன் மதிப்புள்ள 101 டேப்லெட் கணினிகள், மேலும் ரூ. 30,000 மதிப்புள்ள GPS ட்ராக்கர்கள் பொருத்தப்பட்ட 6 WiFi ரவுட்டர்கள் அடங்குகின்றன.
இறக்குமதி விதிமுறைகளை மீறிய காரணத்தால், இந்த மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்ய சுங்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
