டிராக்டர் சக்கரத்தில் சிக்கிய சிறுவன் பலி!
குருநாகல் - கல்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 39 கந்த பகுதியில் டிராக்டரில் சிக்கி 15 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்தார்.
இத்துயர சம்பவம் நேற்று (26) காலை இடம்பெற்றுள்ளது.
இச்சிறுவன் டிராக்டரின் சாரதி இருக்கைக்கு அருகில் ஏற முற்பட்ட போது தவறி விழுந்துள்ளார். இதன்போது குறித்த டிராக்டரின் சக்கரத்தில் சிக்கியுள்ளார்.
காயமடைந்த சிறுவன் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மஹநான்னேரிய பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கல்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
இலங்கை செய்தி
