சீமெந்து கலவை இயந்திரத்தில் சிக்கிய இளைஞன் பலி!
களுத்துறையில் இரண்டு மாடி கட்டிடத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், சீமெந்து கலவை இயந்திரத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
இச் சம்பவம் நேற்று (06) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் பயாகல, ஹல்கந்தவில பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இறந்தவர் வேலை செய்யும் இடத்தின் இரண்டாவது மாடியில் நிறுவப்பட்ட சீமெந்து கலவை இயந்திரத்திலிருந்து சிமெந்து கட்டிகளை மேலே இழுத்துக்கொண்டிருந்தபோது, இயந்திரத்துடன் தரை தளத்திற்கு விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சீமெந்து கலவை இயந்திரத்தில் நசுங்கி பின்னர் அந்த இளைஞர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பலத்த காயமடைந்த இளைஞர் வேலை செய்யும் இடத்தில் இருந்த தொழிலாளர்களால் களுத்துறை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் அங்கு குறித்த இளைஞர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
Tags:
இலங்கை செய்தி
