நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!


வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஆண்டு இறுதியில் நீண்ட விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 17 நாள் விடுமுறையும், ஊழியர்களுக்கு ஒன்பது நாள் விடுமுறையும் வழங்கப்பட்டுள்ளது.

குறைநிரப்பு பிரேரணையை நிறைவேற்ற, நாடாளுமன்றத்தில் இரண்டு சிறப்பு அமர்வுகள் நடத்தப்பட்டன. மேலும் ஜனவரி 6 ஆம் திகதி நாடாளுமன்றம் மீண்டும் கூடவுள்ளது.

இதற்கிடையில், நாடாளுமன்ற ஊழியர்களுக்கு சபாநாயகரின் ஒப்புதலுடன் சிறப்பு விடுமுறை (22 மற்றும் 23) வழங்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற பணிப்பாளர் இது தொடர்பாக ஒரு சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, 24 மற்றும் 26 ஆம் திகதிகள் நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டன. அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை முதல் நாடாளுமன்ற ஊழியர்களுக்கு ஒன்பது நாள் விடுமுறை அளிக்கப்படும்.

இந்த சிறப்பு விடுமுறை நாடாளுமன்ற ஊழியர்களுக்கு வழங்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.