மசாஜ் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு பணிபுரியும் 3 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த 2 பொலிஸ் கான்ஸ்டபிள்கள்!
பொரளையில் உள்ள மசாஜ் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு பணிபுரியும் 3 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச் சென்ற 2 காவல்துறை கான்ஸ்டபிள்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் காவல்துறை சிறப்பு பணியக தலைமையகத்தில் பணிபுரியும் கான்ஸ்டபிள் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர், குறித்த இடத்திலிருந்து தப்பிச்செல்ல முற்பட்டபோது,
மேல் மாடியிலிருந்து கீழே விழுந்து காயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக பொரளை காவல்துறையினர் தெரிவித்தனர்.
அத்துடன் அவர் காவல்துறையினரின் பாதுகாப்பின் கீழ் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மேலும் சம்பவத்தில் தப்பியோடிய நபர், காவல்துறை சேவையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஒரு கான்ஸ்டபிள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொரளை காவல்துறை மற்றும் கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டு வருகின்றன.