ரயில் பயணத்தில் ஈடுபடும் மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட சலுகை - ரயில்வே திணைக்களம் தெரிவிப்பு


ரயில் பயணத்தின்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட சலுகைகளை வழங்குவதற்கு திட்டமொன்று செயற்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ரயில்களில் உள்நுழையும்போதும், வெளியேறும்போதும் ஊழியர்களிடமிருந்து உதவி பெற வாய்ப்பு கிடைக்கும் என ரயில்வே பொது மேலாளர் தம்மிக ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, 1971 என்ற தொலைபேசி எண்ணை அழைத்து முன்கூட்டியே அறிவிக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கை, எதிர்வரும் 15ஆம் திகதி முதல் செயற்படுத்தப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.