திரிபோஷா உற்பத்திக்கு சோளத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி
உள்நாட்டில் தேவையான தரப்படுத்தப்பட்ட சோளத்தை நிலையான முறையில் பெற்றுக் கொள்வதில் காணப்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு, திரிபோஷா உற்பத்தியை இடையறாது முன்னெடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நாடளாவிய ரீதியில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து திட்டங்களை செயல்படுத்துவதில் முக்கிய பங்காற்றும் “இலங்கை திரிபோஷா லிமிடெட்” நிறுவனத்திற்கு தேவையான சோளத்தை உறுதியாக வழங்கும் பொருட்டு, இறக்குமதி செய்யும் வாய்ப்பு வழங்குவது அவசியமாகும்.
இதனையடுத்து, ஒரே ஆண்டுக்கு தேவையான அளவிலான தரப்படுத்தப்பட்ட சோளத்தை மேற்கண்ட நிறுவனம் இறக்குமதி செய்ய முடிவுகளை எடுக்க, சுகாதார மற்றும் ஊடக அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த முடிவின் மூலம் நாட்டில் குழந்தைகளின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டங்கள் தொடர்ச்சியாகச் செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Tags:
இலங்கை செய்தி