பொசன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 19,000 தானசாலைகள் பதிவு
பொசன் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 19,185 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் ஆலோசகர் வைத்தியர் லக்ஷ்மி சோமதுங்க தெரிவித்தார்.
இந்த தானசாலைகளின் பொது சுகாதாரத் தரங்களைக் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பொசன் தினத்தை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச உணவு மற்றும் பானங்களை தானசாலைகள் ஊடாக வழங்குவது இலங்கையில் மிகவும் மதிப்புமிக்க ஒரு பாரம்பரியமாகும் என வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு – 944, கம்பஹா – 1,792, களுத்துறை – 977, கண்டி – 1,264, மாத்தளை – 812, நுவரெலியா – 352, காலி – 1,186,மாத்தறை – 1,021, அம்பாந்தோட்டை – 533, இரத்னபுரி – 1,097, கேகாலை – 922 ஆகிய இடங்களில் உணவு பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கழிவு முகாமைத்துவம் ஆகியவற்றில் விசேட கவனம் செலுத்தப்படும் எனவும், அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் அர்த்தமுள்ள பொசன் கொண்டாட்டத்தை உறுதி செய்வதாகவும் வைத்தியர் லக்ஷ்மி சோமதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.
Tags:
இலங்கை செய்தி