நாடளாவிய ரீதியில் PCR பரிசோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை!


நாட்டில் புதிய கொவிட் திரிபு வேகமாகப் பரவுகிறதா என்பதைக் கண்டறிய நாடளாவிய ரீதியில் பி.சி.ஆர் பரிசோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயளாலராக நியமிக்கப்பட்டுள்ள வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று (28) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

உலகெங்கிலும் பல நாடுகளில் மீண்டும் பரவி வரும் புதிய கொவிட் வைரஸ் குறித்து சுகாதார அமைச்சகம் சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.