காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை!
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவிப்பானது நாளை (30) மதியம் 12.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சிலாபம் முதல் புத்தளம் வரையிலும், மன்னார் முதல் காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரக் கடல் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு வளிமண்டல திணைக்களம் அறிவுறுத்துகிறது.
அதன்படி, மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மேல் கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி