ஊசி மூலம் ஹெரோயினை உட்செலுத்திய இளம் குடும்பஸ்தர் பலி!
யாழில் ஊசி மூலம் ஹெரோயினை உள்ளே செலுத்திய இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரி - மட்டுவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரை 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காணவில்லை என உறவினர்கள் தேடியுள்ளனர். அப்போது தாயாரின் வீட்டிற்கு பின்னால் சடலமாக காணப்பட்டார்.
அவரது சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தியவேளை ஊசி மூலம் ஹெரோயின் பாவித்ததன் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Tags:
இலங்கை செய்தி