நாட்டில் துல் ஹஜ் மாத தலைப்பிறை தென்பட்டது!
உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, மே 28 ஆம் திகதி நேற்று புதன்கிழமை ஹிஜ்ரி 1446 துல் ஹிஜ்ஜாஹ் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டுள்ளது.
அவ்வகையில், 2025 ஜூன் 29 ஆம் திகதி இன்று வியாழக்கிழமை ஹிஜ்ரி 1446 துல் ஹிஜ்ஜாஹ் மாதத்தின் 01 ஆம் பிறை என கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (DMRCA) ஆகியன ஏகமனதாக அறிவிக்கின்றன.
அதன்படி, ஹஜ்ஜுப் பெருநாள் 2025 ஜூன் 7 ஆம் திகதி சனிக்கிழமை அன்று இலங்கையில் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி