புதிய கல்விச் சீர்திருத்தம் - ஆரம்பப் பாடசாலைகளை புனரமைக்கத் திட்டம்!


கல்வி அமைச்சின் கொள்கைகள் மற்றும் திட்டமிடல் பிரிவில் 2026 ஆண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தத்தில் நாடு முழுவதும் உள்ள ஆரம்பப் பாடசாலைகளில் 312 ஆரம்ப பாடசாலைகளை நவீன வசதிகளுடன் கூடிய பாடசாலைகளாக மாற்றியமைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று முன்தினம் (16) இரவு கல்வி உயர் கல்வி மற்றும் தொழில்துறை கல்வி அமைச்சில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில்துறை கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ , கொள்கை மற்றும் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் ஜயனி பிரசானிக்கா, கொள்கை மற்றும் திட்டமிடல் பிரிவின் மேலதிக செயலாளர் சுஜாதா குலேந்திர குமார் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.