விவாகரத்துக்குப் பின் மகனுக்காக ஒரே மேடையில் ஒன்று சேர்ந்த தனுஷ் - ஐஸ்வர்யா : வைரல் மொமெண்ட்!


நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் விவாகரத்தைக் கூறியிருந்தனர். அதன் பிறகு, அவர்கள் மகன்களுடன் இணைந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையே பகிர்ந்து வந்தனர்.

தனுஷ் தனது பட விழாக்களுக்கு மகன்களை அழைத்துச் செல்லும் பழக்கத்தில் இருந்தார்; அதேபோல், ஐஸ்வர்யாவும் பல நிகழ்ச்சிகளில் மகன்களை உடன் வைத்துப் பங்கேற்றார்.

இந்த நிலையில், தங்கள் மகன் யாத்ராவின் பள்ளிப் பட்டமளிப்பு விழாவில் இருவரும் ஒன்றாகக் கலந்து கொண்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. யாத்ரா, சென்னையில் உள்ள அமெரிக்கன் இன்டர்நேஷனல் ஸ்கூலில் தனது பள்ளிப் படிப்பை முடித்துள்ளார்.

இவ்விழாவில், தம்பதியினர் மகனை கட்டியணைக்கும் மென்மையான தருணங்கள் படமாக மாறி, சமூக வலைதளங்களில் தற்போது தீவிரமாக வைரலாகி வருகின்றன.