தற்காலிகமாக மூடப்படவுள்ள ரயில் பாதை!
களனிவெளி ரயில் பாதையில், பேஸ்லைன் வீதி மற்றும் நாரஹேன்பிட்ட ரயில் நிலையங்களுக்கு இடையிலான வீதி பராமரிப்புக்காக தற்காலிகமாக மூடப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
எதிர்வரும் 17ஆம் திகதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பகுதியளவு மூடப்படும் எனவும் அதே நாளில் இரவு 8 மணி முதல் 18ஆம் திகதி காலை 5 மணி வரை முழுமையாக மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு ரயில்வே திணைக்களம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.
Tags:
இலங்கை செய்தி