கனடாவில் திறக்கப்பட்ட தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபி : கனடா உயர்ஸ்தானிகரிடம் வெளிவிவகார அமைச்சர் கடும் ஆட்சேபனை!


இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் மற்றும் கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டமை குறித்து  இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் எரிக்வோல்ஷிடம் தனது கடும் ஆட்சேபனையை வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகரை அமைச்சர் விஜித ஹேரத் வெளிவிவகார அமைச்சகத்தில் சந்தித்தார்.

இலங்கையில் உள்ள பல்வேறு சமூகங்களிடையே தேசிய ஒற்றுமை ,தேசிய நல்லிணக்கம் மற்றும் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளிற்கு இது தடையாகவும் சிக்கலை ஏற்படுத்தும் எனவும்  அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஆதாரமற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் மற்றும் அதனை அடிப்படையாகக்கொண்ட  நினைவுச்சின்னத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்புதல் தொடர்பில்,  இலங்கை அரசாங்கத்தின் கடுமையான ஆட்சேபனைகளை  வலியுறுத்தியதுடன், இம்முன்னெடுப்புக்கள் நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கான அரசாங்கத்தின் முயற்சிகளை சிக்கலாக்குவதுடன், அவற்றை பெரிதும் பலவீனப்படுத்துகிறதெனவும், வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.